கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு
- அரியலூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
- 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்,
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்படவுள்ள 14 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கானத் தேர்வு அரியலூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வீரர் தேர்வு க்கான போட்டியில் 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அணிக்காக விளையா டவுள்ளனர்.முன்னதாக போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்பரப்பி திருமூர்த்தி, விளாங்குடி வீரபாண்டி யன்,கல்லாத்தூர் விஜய்ஆனந்த், ஆண்டிமடம் நிர்மலா மேரி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் த. ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ,சேகர் ,இளங்கோவன், குமார், ராஜசேகர், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.