உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

Published On 2022-06-23 16:02 IST   |   Update On 2022-06-23 16:02:00 IST
  • தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
  • அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் தனது உதவியாளருடன் வேணாநல்லூர் பெரிய ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அருள்மொழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை கைப்பற்றி தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். மணல் கடத்தி வந்த கொளஞ்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News