உள்ளூர் செய்திகள்

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் மழை

Published On 2022-08-03 09:59 GMT   |   Update On 2022-08-03 09:59 GMT
  • அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் மழை பெய்தது.
  • மின்சாரம் துண்டிக்கப்பட்டது

அரியலூர்:

அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. தூறலாக பெய்ய தொடங்கிய மழை, தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைக்கு முன்பாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News