உள்ளூர் செய்திகள்

தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-08-11 09:22 GMT   |   Update On 2022-08-11 09:22 GMT
  • தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

அரியலூர்:

நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், அஞ்சலக துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் துணை அஞ்சலக ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் தபால் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்."

Tags:    

Similar News