உள்ளூர் செய்திகள்

200 ஏக்கர் வயல்களுக்குள் புகுந்த கொள்ளிடம் நீர்

Published On 2022-07-22 13:30 IST   |   Update On 2022-07-22 13:30:00 IST
  • 200 ஏக்கர் வயல்களுக்குள் கொள்ளிடம் தண்ணீர் புகுந்தது
  • மதகு சீரமைக்கப்படாததால் ஏற்பட்டது

அரியலூர்:

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரண மாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி அருகே கருப்பூரில் கொள்ளி டம் ஆற்றில் உள்ள 7-ம் கண் மதகில் சேதமநை்துள்ள நீ தேக்கும் கதவுகள் சரியாக சீரமைக்கப்படாததால் ஆற்றுநீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்க ளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக கோடாலி கருப்பூர் கிராமத்தில் 150 ஏக்கர் பகுதி வயல்கள், 50 ஏக்கர் குறுவை சாகுபடி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதநை்துள்ளனர்.

கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திற க்கப்பட வுள்ளது தெரிந்திரு ந்தும் அதிகாரிகள் 7-ம் கண் மதகை முன்கூட்டியே சீரமைக்கா மல் மெத்த னமாக இருந்ததே தற்போது பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்த அனைத்து பயிர்களையும் கணக்கெடுத்து உரிய இழ ப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News