உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

Published On 2022-08-12 08:36 GMT   |   Update On 2022-08-12 08:36 GMT
  • அரசு பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது
  • கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது

அரியலூர்:

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காணொளி காட்சி வாயிலாக"போதைப் பழ–க்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கு–ம் நிக–ழ்ச்சி–" நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணி–ப்பாளர் ரவிசேகர் ஆகி–யோர் முன்னி–லையில் வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்கு–னர் மரு.கீதாராணி, ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், உடையா–ர்பாளையம் வருவாய் கோட்டாச்சியர் பரிமளம், வட்டாச்சியர் ஶ்ரீதர், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி, ஜெய–ங்கொ–ண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர்சுமதி சிவக்குமார் மற்றும் நகர்ம–ன்ற உறுப்பினர்கள்,

வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலை–மையிலான மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்உ ள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜெயங்கொண்டம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅன்னை தெரசா நர்சிங் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ மாணவிகள் பேராசி–ரியர்கள் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகி–யோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News