- அரியலூரில் தேசிய கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
- விளையாட்டுத் திறன்அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்
அரியலூர்,
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்தப்படவுள்ள 17 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கோ-கோ போட்டியின் தமிழக அணிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றறது.அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர், கடலூர் என 8 மண்டலங்களில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் உடன் திறன், விளையாட்டுத் திறன், முழு விளையாட்டு அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்.உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில் , உறுப்பினர்களாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, பொய்யாதநல்லூர் ரவி, கௌரவப்பாளையம் செல்வகுமார் ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் செய்திருந்தார்.