உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைகேட்புக் கூட்டம்

Published On 2023-04-11 12:20 IST   |   Update On 2023-04-11 12:20:00 IST
  • பொதுமக்களிடம் இருந்து 275 மனுக்கள் பெறப்பட்டன
  • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 275 கோரிக்கை மனு வரப்பெற்றன.கூட்டத்துக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News