உள்ளூர் செய்திகள்
அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
- அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் 23 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, நிகழ்ச்சி யூனியன் சேர்மன் செந்தமிழ் செல்வி தலைமையில், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்றது. இதில் யூனியன் கமிஷனர் குணசேகரன், ஸ்ரீதேவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, பாப்பாள், சரவணன், ராணி, செந்தமிழ்செல்வி, முருகேசன், சுந்தரவடிவேல், கண்ணகி ரேவதி, மாலா, சிவபெருமாள், ராதாகிருஷ்ணவேணி, சுரேஷ்குமார், அலுவலக மேலாளர் ஆனந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, சகாயராஜ், தமிழ்ஒளி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 23 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.