உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம்

Published On 2023-04-21 06:20 GMT   |   Update On 2023-04-21 06:21 GMT
  • ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது
  • இதில் ஒன்றிய அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்று பேசினார். கணக்கர் தாமோதரன் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இறவாங்குடி ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர் பேசியதாவது: 6.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடையன் ஏரி மூலம் சுமார் 20 ஹெக்டர் விவசாய நிலம் சாகுபடி பெறுகிறது. இந்நிலையில் ஏரியின் மதகு சரி இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிப்படைகிறது. இதனால் உடனே இந்த ஏரியை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News