உள்ளூர் செய்திகள்
- ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடந்தது
- 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில் வெற்றிபெறும் 18 நபர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகிறார்கள்
போட்டியினை பள்ளி தலைமையாசிரியர் பி.கலைச்செல்வி மற்றும் கணக்கு பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் முன்னின்று நடத்தினர். இங்கு வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வட்டார அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை போல் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் வாழ்த்தினர்.