உள்ளூர் செய்திகள்

டூவீலர் மோதி மூதாட்டி சாவு

Published On 2023-07-05 11:51 IST   |   Update On 2023-07-05 11:51:00 IST
  • டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழந்தார்
  • இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோடாலி மெயின் ரோட்டை சேர்ந்த சுப்பையன் என்பவரின் மனைவி அம்பிகை(வயது 85). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் இருந்து கோடாலி காலனி தெரு, பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சங்கர் ஓட்டி வந்த டூவீலர் எதிர்பாராத விதமாக அம்பிகை மீது மோதியது. இதில் காயமடைந்த அம்பிகை ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் ஸ்டேஷனில் அம்பிகை மகன் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

Similar News