உள்ளூர் செய்திகள்
- அரியலூர் உடையார்பாளையத்தில் முந்திரி மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரம் தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி(80). இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அந்தோணிசாமி மகன் சிமியோன் ராஜ்(49) வீட்டில் வசித்து வந்தார். அந்தோணிசாமி சற்று மனநலம் பாதித்து இருந்த வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் அந்தோணிசாமியை தேடி பார்த்து கிடைக்காத நிலையில், சூசைராஜ் என்பவருடைய நிலத்தில் உள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் அந்தோணிசாமி மகன் சிமியோன் ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.