உள்ளூர் செய்திகள்

தேசிய நூலக வார விழா நிறைவு

Published On 2022-11-21 06:41 GMT   |   Update On 2022-11-21 06:41 GMT
  • தேசிய நூலக வார விழா நிறைவடைந்தது
  • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்

அரியலூர்

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நிறைவுப் பெற்றது.

இந்த நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணலீலா, ரோட்டரி கிளப் தலைவர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி, வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் தமிழ்மாறன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழனி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்கலையும் வழங்கினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. எனவே நல்ல பயனுள்ள நூல்களை படித்து சமுதாயத்துக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்றனர்.

முன்னதாக முதல்நிலை நூலகர் ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக அலுவலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News