உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

Published On 2023-02-15 06:32 GMT   |   Update On 2023-02-15 06:32 GMT
பயிற்சியில் தற்காப்பு கலை பற்றி விளக்கி கூறினர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் வட்டார வளமையத்தில் தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சி துவக்க விழா நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் வட்டார வள மைய முற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரிய பயிற்றுனர் ஆசைத்தம்பி வரவேற்று பேசினார். கலை பயிற்சி ஒருங்கிைணப்பாளர் சத்தியபாமா தற்காப்பு கலை பற்றி விளக்கி கூறினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், உத்திராபதி ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்தனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் அகிலா நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News