உள்ளூர் செய்திகள்
- காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவரும், நெல்லித்தோப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரம்யா (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், நடராஜன் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடராஜனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரம்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டத்தில் ஒரு கோவிலில் திருமணம் செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஒற்றுமையாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.