உள்ளூர் செய்திகள்

வெள்ளாற்றில் ஆண் பிணம்

Published On 2023-04-26 12:10 IST   |   Update On 2023-04-26 12:10:00 IST
  • அரியலூர் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News