உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கள்

Published On 2023-11-14 10:52 IST   |   Update On 2023-11-14 10:52:00 IST
  • அரியலூரில் சுற்றி திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்
  • நாய்களை பிடித்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது

அரியலூர், 

அரியலூர் நகரில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது.  இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதுடன், உணவு பொருட்களை கையில் எடுத்து செல்லும் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றனர். குழந்தைகளுடன் செல்பவர்கள், பெரும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்கின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News