உள்ளூர் செய்திகள்

"நடப்போம் நலம் பெறுவோம்" நடை பயிற்சி

Published On 2023-11-04 08:15 GMT   |   Update On 2023-11-04 08:15 GMT
  • அரியலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” நடை பயிற்சி தொடங்கப்பட்டது
  • போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி தொடங்கப்பட்டது. அரியலூர் நகரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி கல்லூன் சாலை, பல்லேன், அரசு மருத்துவமனைச் சாலை, பென்னி ஹவுஸ் தெரு, பெரம்பலூர் சாலை, சத்திரம் நகராட்சி நூலகம், தேரடி, அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டி ஏன், ஜெயங்கொண்டம் சாலை வழியாக அரசு பல்துறை அலுவலக கட்டிடம் வரை சென்று, மீண்டும் அங்கிருந்து திரும்பி அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைய 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயணத்தை நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் "நடப்போம் நலம் பெறுவோம்" நடை பயிற்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் நடைபயிற்சியினை மேற்கொண்டார். இதேபோன்று ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள். மேலும், நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு துவக்க இடம் மற்றும் இடையிடையே மருத்துவக் குழுவினர் முகாம் அமைக்கப்பட்டு அவர்கள் உடல்நலம் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பயண வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் இளைப்பாறும் இடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனி மேன் ஸ்வர்ணா, சின்னப்பா எம்.எல்.ஏ., கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும்துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அஜித்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்விஜயலட்சுமி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூன் மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News