உள்ளூர் செய்திகள்

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை

Published On 2023-11-05 10:37 IST   |   Update On 2023-11-05 10:37:00 IST
  • ஜெயங்கொண்டத்தில் தீபாவளியை முன்னிட்டு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
  • கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, நலிவுற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 60 மேற்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றதுஅரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில், நடைபெற்ற இந்த விழாவில் கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சிவப்பிரகாசம், டாக்டர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கத் தலைவர் வி.கே.ராஜதுரை, செயலாளர் மதிவாணன், வட்டார தலைவர் அன்பரசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், பொருளாளர் ஹரிஹரன், சங்க நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ், அபிநயா, செல் பாலாஜி, மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News