உள்ளூர் செய்திகள்
- அரசு பள்ளியில் ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது
- மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில், உலக உடல் மன ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஜெகதீஸ்வரன், தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.