உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
- மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற 28ந் தேதி காலை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மேற்கண்ட வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.