உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் கொடியேற்று விழா

Published On 2023-01-30 09:17 GMT   |   Update On 2023-01-30 09:17 GMT
  • ஜெயங்கொண்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது
  • மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய முன்பு கோட்ட ஊழியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்ட மத்திய மின் ஊழியர்கள் (சிஐடியு) சங்க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில செயலாளர் அகஸ்டின் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்ட பொருளாளர் கண்ணன், கோட்ட செயலாளர் கண்ணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News