- லஞ்சம் வாங்குவதை தடுக்க நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா
- விவசாயிகள் கோரிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,விவசாயிகள் குறைகேட்புக்கூ ட்டம் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்ம்பா கூறும்போது, சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் அதிகப்படியாகநெல் கொ ள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்க ளில் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.20 ,40, 50 வரை வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம், மருதை யாறு மற்றும் கல்லாறு ஆற்று நீர்களை ஏரியில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் ஆற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கு வடிக்கால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். யூரியா தடுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி , வரத்து வாய்க்கால் மற்றும் புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். செட்டி ஏரியில் தண்ணீர் வடிவதற்காக ஆறு மாதங்களுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறும்போது, நேரடி கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சுக்கிரன் ஏரியில் நீர் குறைவாக உள்ளதால், பிப்ரவரி மாதம் இறுதிவரை பாசனத்துக்கு தண்ணீர் விட வேண்டும். தா.பழூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெண்ணாற்று தலைப்பில் நிரந்தரமாக தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர், நானாங்கூர், ஆதனூர், ஓரியூர், கோமான் ஆகிய கிராமங்களையும் டெல்டா பாசன பகுதியில் இணைக்க வேண்டும். தொடர்ந்து விவசாயி களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா ளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.