உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

Published On 2023-01-29 06:32 GMT   |   Update On 2023-01-29 06:32 GMT
  • அரியலூரில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
  • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை கற்பிற்போம் உள்ளிட்ட பல்வேறுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பணி முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

மேலும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நடைபெறும் பணிகள், முடிவுற்ற பணிகள், பயனாளிகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன், அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தினார்.

இ்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News