உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்

Published On 2023-01-23 06:25 GMT   |   Update On 2023-01-23 06:25 GMT
  • மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தது. கீழப்பழுவூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 14, 17, 19 வயதுடைய பள்ளி மாணவ, மாணவிகள் 3,500 பேர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தனித் திறன்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், ஷாயின்ஷ, ரவிச்சந்திரன், மோகன்தாஸ், மரிய பிரிட்ஜித், வீரபாண்டியன், பாண்டியன், ஜாக்குலின் உஷா, மேரி, கரோலின், கண்ணன், சுப்ரமணியன், குறிஞ்சிவேந்தன், வினோத்குமார், தர்மலிங்கம் வந்தியத்தேவன், ரவி, அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News