உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தே.மு.தி.க.-வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-11 11:57 IST   |   Update On 2023-08-11 11:57:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்.
  • மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமை வகித்தார்

அரியலூர் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,விவசாய நிலங்களை பாழ்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும், கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமை வகித்தார். தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை துணைச் செயலர் சக்திவேல் கண்டன உரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட துணைச் செயலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். முன்னதாக நகரச் செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்றார். முடிவில் அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News