உள்ளூர் செய்திகள்

கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-09-11 13:39 IST   |   Update On 2023-09-11 13:39:00 IST
  • கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
  • ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 46). இவர் புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கொளஞ்சி அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சாமிக்கண்ணு மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், அய்யப்பன் ஆகியோர் கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொளஞ்சி அளித்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கொலை மிரட்டல் விடுத்த சாமிக்கண்ணு, கண்ணன், அய்யப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News