உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு 3 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை

Published On 2022-06-20 14:46 IST   |   Update On 2022-06-20 14:46:00 IST
  • கொரோனாவுக்கு 3 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

அரியலூர்:

கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளார்.

நேற்று அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் வட்டாரத்தில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, அவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


Tags:    

Similar News