உள்ளூர் செய்திகள்

கையக படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவு: பா.ம.க.வினர் கொண்டாட்டம்

Published On 2022-06-09 09:35 GMT   |   Update On 2022-06-09 09:35 GMT
  • கையக படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவுவை தொடர்ந்து பா.ம.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.
  • தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி புதுக்குடி தண்டலை கல்லாத்தூர் உள்ளிட்ட13 கிராமங்களில் நிலக்கரி இருப்பதாக கூறி நிலங்களை தமிழக அரசு 1996 ம் ஆண்டு1,210 பேரிடம் 8,370 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.

அவர்களுக்கு இதுநாள்வரை போதி–யஇழப்பீ–டும்வழங்க––ப்படவில்லை. நிலங்களும் திருப்பி அளிக்கப் பட–வில்லை. இதற்காக பாட்டா–ளி மக்கள் கட்சி தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு நிலங்களை திருப்பி பொதுமக்களிடமே வழங்கலாம் எனஉத்தரவி–ட்டதை அடுத்து ஜெயங்கொ–ண்டம் நால்ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தங்கராசு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ். பரசுராமன் தா பழூர் ஒன்றிய செயலாளர் கொளஞ்சி நாதன்ஜெயங் கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News