உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையத்தில் பைக் மோதி சிறுவன் படுகாயம்

Published On 2023-06-25 11:40 IST   |   Update On 2023-06-25 11:40:00 IST
  • உடையார்பாளையத்தில் பைக் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடையார்பாளையம்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ராஜவீதி இலியாஸ் மகன் பார்கன்(வயது 8). இவர் இவரது தாய் ரிகானாவுடன் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ராஜ வீதியில் வேனில் இருந்து இறங்கி சாலை கடந்து சென்றனர். அப்போது அதே வீதியில் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(25)ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக பார்கன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பார்கன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் எஸ் ஐ சுமதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News