ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
- ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி ராஜா வரவேற்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் நகர தலைவர் ராமர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர்கள் கோகுல், பாபு கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகரில் கஞ்சா பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் 9-வது வார்டில் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்,கொம்மேடு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலை திறக்க வேண்டும், பாப்பாகுளம் சாலை மிக மோசமாக உள்ளதாகவும் அதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் மதிநிறச்செல்வி மற்றும் ஏராளமான பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டணர். முடிவில் நகர துணை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.