சிவசேனாவை அழித்தது போல் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. அழிக்கிறது - கே.எஸ்.அழகிரி குற்றச்சட்டு
- சிவசேனாவை அழித்தது போல் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. அழிக்கிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாற்றியுள்ளார்.
- காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து, நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி செயல்பாடு இல்லை. அவர்களுக்குள் உள்ள பிரச்சினைக்கு காரணமே பா.ஜ.க. தான். ஏற்கனவே துணை முதல்-அமைச்சர் பதவியை ஒப்புக் கொண்டதற்கு, பிரதமர் கூறியதால்தான் ஒப்புக்கொண்டேன் என்பதை ஓ.பன்னீர்செல்வம் கூறியதை நினைவுபடுத்தினார்.
இப்பேதும் அவர் பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதேபோல் பழனிசாமியும் பிரதமருடன் தொடர்பில் உள்ளார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகிய 3 பேரையுமே பா.ஜ.க. பொம்மையாக கையால்கிறது. இந்தியா முழுவதுமே தனது கூட்டணி கட்சிகளை பா.ஜ.க. அப்படிதான் சிதைத்தார்கள். சிவசேனாவை அழித்தது போல் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. அழிக்கிறது என்றார். முடிவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நன்றி கூறினார்."