உள்ளூர் செய்திகள்

வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

Published On 2022-07-12 15:02 IST   |   Update On 2022-07-12 15:02:00 IST
  • வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவரை கைது செய்தனர்.
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லனம் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(வயது 45) வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சவுந்தரராஜனை கைது செய்தனர்.

Tags:    

Similar News