உள்ளூர் செய்திகள்

இணைய மோசடி மூலம் இழந்த ரூ.3 லட்சத்தை மீட்டு உரியவரிடம் மீண்டும் ஒப்படைத்த அரியலூர் காவல் துறையினர்

Published On 2023-06-27 06:56 GMT   |   Update On 2023-06-27 06:56 GMT
  • இணைய மோசடி மூலம் இழந்த ரூ.3 லட்சத்தை அரியலூர் காவல் துறையினர் மீட்டு உரியவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர்
  • காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்தவர் சூரியகலா (வயது 34). இவரது கணவர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது மகளுடன் அம்மன் சன்னதி வசித்து வரும் இவர், அஞ்சல் துறையில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவதற்காக ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேடியுள்ளார். அப்போது ஒருவர், சூரியகலா கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக லிங்க் ஒன்றை அனுப்பி, அதன் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.பின்னர் அவர், சூரியகலா பதிவிட்ட வங்கி பயனர் ஐ.டி. பாஸ்வேர்டு எண்ணை தெரிந்துக் கொண்டு சூரியகலா கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை அபகரித்துக்கொண்டார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதனை உணர்ந்த சூரியகலா அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் கடந்த 3.6.2023 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, இணைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்) ஆகியோர் கொண்ட போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பணத்தை அபகரித்தவரின் வங்கி கணக்கை உடனே முடக்கம் செய்து, மனுதாரர் இழந்த ரூ.3 லட்சத்தை திரும்ப பெற்று, சம்மந்தப்பட்டவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சூரியகலாவை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, அவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.

Tags:    

Similar News