உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் தினவிழாவில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பாராட்டு
- அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
- இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
அரியலூர் ;
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
இதையடுத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு)சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை கனகலட்சுமிக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரவி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.