உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2023-06-13 06:38 GMT   |   Update On 2023-06-13 06:38 GMT
  • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
  • கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் செந்தில்குமார், பாதுகாப்பு அலுவலர் ஜெ.செல்வராசு மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News