உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம்

Published On 2022-06-08 12:42 IST   |   Update On 2022-06-08 12:42:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 38 ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருத்துகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி. செந்துறை வட்டாரத்தில், மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு,

மணக்குடையான். திருமானூர் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டி.ஜயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி,

முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம்,காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி. ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை,

இலையூர், சில–ம்பூர். தா.பழூர் வட்டாரத்தில், அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல் ஆகிய 38 ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடை பெற்றது.

இந்த முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது.

பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு, கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. முகாமுக்கு அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்கள் தலைமை வகித்தனர்.

Tags:    

Similar News