உள்ளூர் செய்திகள்

ஆடித் திருவாதிரை விழா ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-04 12:58 IST   |   Update On 2023-07-04 12:58:00 IST
  • கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா நடைபெற உள்ளது
  • கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை விழாக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்துக்கு கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து பேசுகையில், மாமன்னர் ராசேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 12-ம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் பெருவடையார் கோவிலில் கொண்டாடப்படவுள்ளது. விழாவின் போது, பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் . மேலும் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் விரிவான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினர்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News