உள்ளூர் செய்திகள்

அனுமதி இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை - ஆர்.டி.ஓ. எச்சரிக்கை

Published On 2022-10-08 09:12 GMT   |   Update On 2022-10-08 09:12 GMT
  • அனுமதி இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
  • கடைகளில் நேரில் ஆய்வு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார் பாளையம் 2கோட்டங்களும், அரியலூர் செந்துறை ஜெய–ங்கொண்டம் ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களும், 6 ஒன்றியங்களும், 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை கொண்டு–ள்ளது.

தீபாவளி பண்டிகையை–யொட்டி அரியலூர் மாவட்ட–த்தில் பட்டாசு விற்பனை தொடங்கி விட்டது. ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிலர் அனுமதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் பட்டாசு விற்பனை செய்கிறார்கள்.

இந்நிலையில் அரிய–லூர் நகரில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வருவாய் ஆய்வா–ளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் ஆகியோர்கள் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு உபகரண–ங்கள் இருக்க வேண்டும், மணல்வாளி–களை வைத்திருக்க வேண்டும், தீயணைப்பு கருவிகள் வை–த்திருக்க வேண்டும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆர்டிஓ எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News