உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து; மகன் கண் முன்னே தாய் பலி

Published On 2023-06-22 12:38 IST   |   Update On 2023-06-22 12:38:00 IST
  • மகன் கண் முன்னே தாய் பலியானார்
  • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் தா.பழூர் வானியன்கேணி பகுதியில் வசித்து வருபவர் கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி(வயது 55). இவர் தனது மகன் கலைச்செல்வனுடன் மயிலாடுதுறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கோடாலி கருப்பூர் கிராமம் ஆயிபாளையம் ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். சம்பவத்தில் தலையில் காயம் ஏற்பட்ட தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகன் கலைச்செல்வன் தன் கண் முன்னாடியே தனது தாய் இறந்த அதிர்ச்சியில் மயக்க நிலையில் இருந்துள்ளார். சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் கலியமூர்த்தி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News