உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் லாரியில் கடத்தப்பட்ட 5 டன் புகையிலை பொருட்கள் சிக்கியது

Published On 2022-07-24 09:26 GMT   |   Update On 2022-07-24 09:26 GMT
  • லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்
  • லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கும்பகோணம் -விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் தா பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சிலால் கிராமத்தில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று வந்தது. உடனே போலீசார் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News