உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2023-08-16 13:46 IST   |   Update On 2023-08-16 13:46:00 IST
  • வி.கைகாட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
  • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் கயர்லாபாத் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விளாங்குடி மேலத்தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 27), தேளூர் ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டை சேர்ந்த அன்பழகன் ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News