உள்ளூர் செய்திகள்

பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2022-08-03 09:49 GMT   |   Update On 2022-08-03 09:49 GMT
  • பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
  • மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் இளவரசன் (வயது 43). இவர் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதேபோல் 2015-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்கெடுமை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் இளவரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி இளவரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி மனைவி வசந்தா (51). இவர் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இவரது மேல் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி வசந்தாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

Tags:    

Similar News