உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- அரியலூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் அருகே திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வுத் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை மேற்கொ ண்டதில், அதில் 300 கிலோ ரேஷன் அரிசியும், 750 கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசியும் என மொத்தம் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதனை கடத்தி வந்ததது அரியலூர் மாவட்டம் நாகல்குழி, கீழத்தெருவைச் சேர்ந்த சோமு மகன் சங்கர் (வயது55), சங்கர் மனைவி வளர்மதி (42) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜெய ங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.