உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

Published On 2023-07-24 12:38 IST   |   Update On 2023-07-24 12:38:00 IST
  • கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர்.
  • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நடைபெற்றது. அப்போது ஐதீகப்படி ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், கோவில் அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பிரிவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோவில் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News