உள்ளூர் செய்திகள்
வில் வித்தை போட்டி: புதியம்புத்தூர் எடிசன் பள்ளி சாதனை
- ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது.
- புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
புதியம்புத்தூர்:
ஈரோடு மாவட்டம் பவானியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இப்போட்டியில் புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் 12 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இம் மாணவ- மாணவிகள் நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சியாளர் ஆசிரியர் பாலாஜியையும், பள்ளி தாளாளர் அன்பு எடிசன் பாராட்டினார்.