உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-03-02 14:51 IST   |   Update On 2023-03-02 14:51:00 IST
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது.
  • நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

சேலம்:

தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி–யினர் நலத்துறை சார்பில் மாணவ- மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை tnadtwscholarship.tn.gov.in. என்ற இணையதளம் வாயிலாக கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி ெதாடங்கியது.

3 லட்சம் பேர்

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாண–விகள் விண்ணப்பித்துள்ள–னர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் ஏராளமா–னோர் விண்ணப்–பித்துள்ளனர். விதிமுறைகளின்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்–கப்பட்ட ஜாதி சான்று, வருமான சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரிபார்க்கப்படும்.

இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ெதாடர்பாக வீடியோ வெளியி–டப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்–படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News