உள்ளூர் செய்திகள்

பள்ளி தாளாளர் நடராஜன், குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தபோது எடுத்த படம்.

ஓசூர் அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டுவிழா

Published On 2023-03-05 09:46 GMT   |   Update On 2023-03-05 09:46 GMT
  • விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.
  • ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

ஓசூர்,  

ஓசூர்- டி.வி.எஸ் சாலையில், கொத்தூரில் அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆண்டுவிழா, நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உத்திரியம்மாள், ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

இதில், ,துணைத் தாளாளர் சிவானந்தா, பள்ளி செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலா ளர்களான லோகநாதன், வெங்கடரமணா குருகுலம் பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் விழாவையொட்டி, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News