உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா

Published On 2023-09-16 08:37 GMT   |   Update On 2023-09-16 08:37 GMT
  • விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பஸ் நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மருதுபாண்டியன், விக்னேஷ் ராஜா, துரைராஜ், ரத்தினராஜ், முருகன், முத்துலட்சுமி, வீரமணி, புல்லட் கணேசன், கார்த்திக், பிச்சை மணி, ராம்குமார், பரமசிவம், ஆனந்தா ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News